Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM
காரைக்கால்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் ப.மதியழகன் தலைமையில், துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் காரைக்கால் காட்டுநாயக்கன் தெருவாசிகள் நேற்று காரைக்கால் ஆட்சியர் அர்ஜூன் சர்மாவிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளது:
காரைக்கால் கோயில்பத்து அருகே உள்ள காட்டுநாயக்கன் தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இங்கு குடியிருப்பவர்களுக்கு மனைப்பட்டா இல்லாத நிலையில், தற்போது ரயில்வே பணிகள் நடைபெறுவதால், குடியிருப்புகளை காலி செய்யச் சொல்லி ரயில்வே நிர்வாகம் வலியுறுத்துகிறது. எனவே, எங்களுக்கு நிரந்தரமான இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT