Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பு

வணிகர்களின் கோரிக்கைகளை அரசு நிறை வேற்றாவிடில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா தெரிவித்தார்.

திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைப்பதற்கு பதிலாக உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்க வேண்டும் என வலியு றுத்தி சாலை விரிவாக்கப் பணிக ளால் பாதிக்கப்பட்டோர் கூட்ட மைப்பு சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட் டம் திருச்சி காட்டூரில் நேற்று நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்று ஏ.எம்.விக்கிரமராஜா பேசியது: திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைப்பதால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வணி கர்கள், சிறுவியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக் கப்படும். இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு, உயர்மட்ட பறக் கும் சாலை அமைக்க நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தால் வணிகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க பேரமைப்பு துணை நிற்கும். தேவைப்பட்டால் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று போராடி தீர்வு காணப்படும்.

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், வழி பாட்டுத் தலங்கள், கல்வி நிறுவ னங்கள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றை இடிக்கும் நடவடி க்கைகளை அரசு மேற்கொண்டு வருவதை கைவிட வேண்டும்.

தமிழகத்தில் வணிகர்களின் வாக்கு மட்டும் ஒரு கோடி அளவுக்கு உள்ளது. ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள வணிகர்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

போராட்டத்துக்கு தலைமை வகித்து பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வீ.கோவிந்த ராஜூலு பேசியது: 3-வது கட்ட போராட்டத்துக்கு பிறகாவது இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். தீர்வு ஏற்படாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம். ஆதார், ரேஷன், வாக்காளர் அட் டைகளை அரசிடமே ஒப்படைப் போம். போராட்டங்களும் தீவிரப் படுத்தப்படும். பால்பண்ணை- துவாக்குடி இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வாக்குறுதி யளிக்கும் வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவோம் என்றார்.

போராட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம், காயாம்பு, ஜெய்னுதீன் ஆலம், மாரப்பன், ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தையொட்டி பால் பண்ணை முதல் துவாக்குடி வரை யில் திருச்சி – தஞ்சாவூர் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x