Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

திருவாரூர் அருகே சொரக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருவாரூர் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் சார்பில், மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சொரக்குடியில் உள்ள ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை(பிப்.25) நடைபெற உள்ளது. முகாம் தொடக்க நிகழ்வில், அமைச்சர் ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இம்முகாமில் தொழில் துறை, சேவைத் துறை, விற்பனைத் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான 12 ஆயிரம் நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு, இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இங்கு, உயர்கல்வி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கிக் கடன் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்ட உள்ளன.

எனவே, 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறன் இளைஞர்கள், தங்களின் சுயவிவரக் குறிப்பு, ஆதார் கார்டு மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் வந்து, பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x