Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

மாணவர்களுக்கு பரிசளிப்பு

தேசிய பசுமைப்படை வாரத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டம் விழிதியூர் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பள்ளித் தலைமையாசிரியர் பி.எஸ்.கண்ணதாசன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஏ.சுரேஷ் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x