Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

அரசு மருத்துவமனைகளில் அறுவை அரங்கு நுட்புநர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தஞ்சாவூர்: தமிழ்நாடு அறுவை அரங்கு நுட்புநர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் ம.நடராஜன் தலைமையில் தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அஜித்குமார் வரவேற்றார். மாநில துணைத் தலைவர்கள் மீரான்கான், வள்ளி, செயலாளர்கள் சாந்தி, தேன்மொழி, முரளி, விமலேஸ்வரி, யூனிஸ், நெக்லின், மோகன், பொருளாளர் பிரிதிவிராஜன், மாநில மகளிரணித் தலைவர் எச்.ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழாசிரியர் சங்க மாநிலத் தலைவர் ராக.ராமு கலந்துகொண்டார்.

தமிழகம் முழுவதும் அரவை அரங்கு நுட்புநர் தொழிற்பயிற்சியை படித்து முடித்த 3 ஆயிரம் பேர், அரசு வேலைக்காக 15 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அறுவை அரங்கு நுட்புநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, தொழிற்பயிற்சி முடித்தவர்களை தகுதியின் அடிப்படையில் அப்பணிக்கு நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x