Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்

கோவில்பட்டி அருகே வில்லிசேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடிக்கான சான்றிதழை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி

கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் நடந்தது. ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்கடம்பூர் செ.ராஜூ, கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேலக்கரந்தையில் அம்மா சிறிய மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x