Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM
வாணியம்பாடி: வாணியம்பாடியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசுப்பள்ளி சுற்றுச்சுவரை புதுப்பிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் காந்திநகர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், இங்கு மாவட்ட கல்வி அலுவலகமும் இயங்கி வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியின் நுழைவு வாயிலையொட்டியுள்ள சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இவ்வழியாக பள்ளி மாணவர்கள் சென்று வருவதால், இடிந்து விழும் நிலையில் உள்ள சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT