Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

வாகன ஓட்டுநர்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூர் தலைமை அஞ்சலகம் முன்பாக அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு நிறுவனத்தலைவர் குணசேரகன் தலைமை வகித்தார். இதில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மாநில அரசை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.

மேலும், நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல, பொதுமக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக்கூறி வாகன ஓட்டிகள் முழக்கம் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x