Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

மு

மு.க.ஸ்டாலின்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது சங்கிலித் தொடர்! பேருந்து கட்டணம், உணவுப்பொருட்கள், மளிகை, காய்கறிகளின் விலை கூடி அனைத்து தரப்பினரையும் பாதிக்கும்! பிற மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தும், மாநில வரியைக் குறைத்தும் நடவடிக்கை எடுக்கின்றன. தமிழக முதல்வரின் நடவடிக்கை என்ன?

திருமாவளவன்: புதுச்சேரியில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து அரசியல் கட்சிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை தமிழ்நாட்டிலும் சனாதனிகள் விரிவுபடுத்துவார்கள் என்பதையும்; புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே என்பதையும் அறிய முடிகிறது.

ஹெச்.ராஜா: புதுச்சேரி காங்கிரஸ் அரசு ஒட்ட வைக்கப்பட்ட உடைந்த கண்ணாடியாகவே இருந்து வந்தது. இனியும் பயன்படுத்த இயலாது என்ற நிலையில் பல காங்கிரஸ் தலைவர்கள் அதை தூர வீசி வெளியேறினர். அதன் விளைவாக இன்று நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x