Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் விலைவாசி உயரும்

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் விலைவாசி உயரும். ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே, மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது வரிகளைக் குறைக்கச் சொன்ன பாஜக, தற்போது ஆளுங்கட்சி ஆன பின்பு வரிகளை உயர்த்தியுள்ளது.

- திமுக தலைவர் ஸ்டாலின்

பயிர்க்கடன் தள்ளுபடியில் அதிமுகவினர் அதிக லாபம் அடைந்துள்ளதாக கே.என்.நேரு குற்றம்சாட்டுகிறார். கூட்டுறவு வங்கிகளில் யார் யார் கடன் பெற்றார்கள் என்ற விவரம் அவர் கேட்டால் கொடுக்கப்படும். தற்போது பயிர்க்கடன் பெற்ற 12 லட்சம் விவசாயிகள் அதிமுகவினரா? விவசாயக்கடன் தள்ளுபடியால் அதிமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்ததை திமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

- அமைச்சர் செல்லூர் கே.ராஜு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x