Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

டூல்கிட் வழக்கில் நிகிதா, ஷாந்தனுவிடம் போலீஸ் விசாரணை

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் பகிர்ந்த டூல்கிட் தொடர்பான வழக்கை டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே முன்ஜாமீன் பெற்றுள்ள மும்பை வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப், அவரது கூட்டாளியும் இன்ஜினீயருமான ஷாந்தனு முலுக் ஆகியோரிடம் டெல்லி போலீஸ் சைபர் பிரிவு அதிகாரி கள் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x