Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு

பொள்ளாச்சி

நெகமம் அருகே உள்ள கப்பிணி பாளையத்தை சேர்ந்த ராமராஜ், மனைவி ஜமுனா ஆகியோர் தோட்டத்து சாளையில் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் தென்காசி தென்கரையை சேர்ந்த சச்சின்என்பவரை தோட்டப் பணிக்கு சேர்த்துள்ளனர். நேற்று முன்தினம் ராமராஜ், ஜமுனா ஆகியோர் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட சச்சின், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் வைர நகைகளைத் திருடிக்கொண்டு, வீட்டில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தையும் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x