Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

பயணிகள் நிழற்குடைகள் திறப்பு

கோவை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் பூலுவப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மோளப்பாளையம், நாதேகவுண்டனூரில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற் குடைகளை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி திறந்துவைத்தார்.

மேலும், ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சிக் கூடம், தென்னமநல்லூர், மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர் செட்டிபாளையம் பகுதிகளில் ரூ.16.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள், உயர்நிலை பாலம், பள்ளி வகுப்பறைக் கட்டிடங்கள் ஆகியவற்றையும் திறந்துவைத்த அமைச்சர், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x