Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

கோவை: தமிழக அரசு சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 210 பேர் இதற்காக விண்ணப் பித்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது. அலுவலகத்துக்குள் 10 பேர் வீதம் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

நீண்ட நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள், திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகே அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, ‘‘நேர்காணல் என்ற பெயரில் எங்களை நாள் முழுவதும் காக்க வைக்கின்றனர். எனவே, நேர்காணலின்றி ஸ்மார்ட் போன் வழங்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரர்களை பகுதி பகுதியாக நேர்காணலுக்கு அழைக்க வேண்டும்’’ என்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி, அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x