Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

பெட்ரோல் விலை உயர்வு: சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, சிஐடியு சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் தலைமை வகித்தார். மோட்டார் சங்க மாவட்ட செயலாளர் ஒய்.அன்பு, மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், எரிபொருள் விலை உயர்வால் வாகனங்களை கயிறு கட்டி இழுத்துச் செல்வது போலவும், இருசக்கர வாகனத்தை சுமந்து செல்லும் நிலை இருப்பது போலவும் தொழிலாளர்கள் காட்சிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x