Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

பணிநீக்கத்தை எதிர்த்து 36 ேபர் உண்ணாவிரதம்

திருவள்ளூர் அருகே புதூரில் தனியார் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 36 ஒப்பந்த தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் திடீரென பணிநீக்கம் செய்ததால், அத்தொழிலாளர்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.இச்சூழலில், பாதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு மாநில நிர்வாகி ப.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x