Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மறியல்

விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலை மார்க்கத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

விருத்தாசலம்

விருத்தாசலம் பூவராகவன் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட் டனர்.

விருத்தாசலம் ஜங்ஷன் சாலை யில் உள்ள பூவராகவன்நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைமற்றும் வீதிகளை சிலர் ஆக்கிரமித்து சொந்த பயன்பாட்டில் வைத்துள்ளனர்.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் விருத் தாசலம் நகராட்சியினர் உடனே ஆக்கிரமிப்பை அகற்ற வேண் டும் என அப்பகுதி மக்கள் நகராட்சிஅலுவலகத்தில் புகார் அளித்திருந் ததாக கூறப்படுகிறது.

புகார் அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், ஆக்கிமிப்புகளை உடனடியாக அகற்றி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் பூவராகவன் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் காவல்துறையினர் ஆக்கிரமிப்பு களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைய டுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x