Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

நிலுவைக் கோரிக்கைகளை நிறைவேற்ற சிக்கன நாணய சங்கத்தினர் அமைச்சருடன் சந்திப்பு

மதுரை

தமிழகத்திலுள்ள பணியாளர் கூட்டுறவுச் சிக்கன நாணயச் சங்க ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களையக்கோரி அமைக்கப்பட்ட குழுவிடம் மாநில கூட்டமைப்பு அளித்த கோரிக் கைகளை விரைந்து நிறைவேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

அப்போது, 2017 ஜன. 1 முதல் நிதி பயன் அளித்தல், வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மலைவாழ்படி, குளிர்காலப் படி ஆகியவை அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்க வேண்டும், தேர்வு நிலை/சிறப்பு நிலை 2 வருடாந்திர ஊதிய உயர்வு வழங் குதல், அரசாணை, செயல்முறை ஆணைப்படி ஊதியம் பெறாத பணியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம், பணி நிலைத் திறன் உறுப்பினர் கடன் அளவைக் கொண்டு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அளித்தும் நிலுவையில் உள்ளதாகவும், விரைவாக அறிவித்திடுமாறும் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்ட நீதி மன்றத்துக்கு நன்றி தெரிவிக்கப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x