Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவி வழங்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் ரூ.3000 வழங்க வேண்டும். இயற்கை மரண நிதி ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x