Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
தூத்துக்குடி
தூத்துக்குடி நகர மின் விநியோக கோட்ட செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, தூத்துக்குடி ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, போல்பேட்டை, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை, இன்னாசியார்புரம், எழில் நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சி நகர், அண்ணா நகர், விவிடி சாலை, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கேடிசி நகர், ஹவுசிங்போர்டு காலனி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று (பிப்.23) காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.இதேபோல் உயரழுத்த மின் பாதையில் மின் கம்பங்களை பாதுகாப்பு கருதி உயர்த்தும் பணி நடைபெறுவதால் ராம்நகர் 4, 5-வது தெரு, கேடிசி டிப்போ சாலை, எட்டயபுரம் பிரதான சாலை பகுதிகளில் இன்று (பிப்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT