Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச இன்டர்நெட் தரவு அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெகேஎன்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், கல்லூரி மாணவ,மாணவிகள் 7,318 பேருக்கு அரசின் இலவச இன்டர்நெட் தரவு அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அசோக்ராஜன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மலர்விழி, ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்செல்வி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT