Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

இலுப்பூர் அருகே புளியோதரை சாப்பிட்ட38 பேருக்கு வாந்தி, மயக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு திருநல்லூர் ஊராட்சியில் இருந்து சென்றோருக்கு அதே ஊரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் அங்கேயே முட்டையுடன், புளியோதரை சாதத்தை பொட்டலங்களாக வழங்கினர். அதை பலர் அங்கேயே சாப்பிட்டுள்ளனர். மீதம் இருந்த பொட்டலங்களை இரவில் சாப்பிட்ட திருநல்லூர், கலர்பட்டி, ஆச்சநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வள்ளிக்கண்ணு(40), புவனேஸ்வரி(40), சத்யா(25) உள்ளிட்ட 38 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x