Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசி: சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில், சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் ரத்தினவேல் தலைமை வகித்தார். செயலாளர் லெட்சுமி, துணைத் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்டச் செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தர்மராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் அசோக்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூலி உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி, கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

விவசாயத் தொழிலாளர்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் செங்கோட்டை தாலுகாக் குழு சார்பில், தென்காசி ஆட்சியர் அலுவலகம் அருகில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் தொடர்ச்சியாகவும், முழுமையாகவும் வேலை வழங்கக் கோரி இப்போராட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x