Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
தென்காசி: பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு குழு, அரிமா சங்கம் சார்பில் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை உதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கண்தான விழிப்புணர்வுக் குழுச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். 173 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 51 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், எஸ்.கே.டி.பி. யோகா மருத்துவமனை மருத்துவர் கோபி, நேரு பாராமெடிக்கல் செவிலியர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT