Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
தென்காசி: பாவூர்சத்திரம் அருகே அடைக்கலப்பட்டணம் எஸ்எம்ஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். அகாடமிக் இயக்குநர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். பல்வேறு போட்டிகள் இணையவழியில் நடத்தப்பட்டன. சங்க காலப்புலவர்கள் போன்று வேடமணிந்து குழந்தைகள் போட்டியில் பங்கேற்றது வெகுவாக கவர்ந்தது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் பாகீரதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT