Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 1997 - 1999-ம் ஆண்டு வரை படித்த மாணவ, மாணவிகள் 22 ஆண்டுகளுக்கு பின் நேற்று சந்தித்துக்கொண்டனர். ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் பி.கோல்டா கிரேனா ராஜாத்தி தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு சென்று தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு ஆண்டுதோறும் நடக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானித்தனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ஞா.அமல்ராஜ், சாந்தி ராஜகனி, சு.செல்வம், பெ.குணசேகரன் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x