Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

கோழிகளை விஷம் வைத்து கொன்றவர் கைது

நாகர்கோவில்

செண்பகராமன்புதூரில் சுரேஷ், ராஜன் ஆகியோர் கோழிப்பண்ணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இங்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் இறந்துகிடந்தன. புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு விநியோகிக்கும் தண்ணீரில் விஷம் கலந்து கோழிகள் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இச்செயலில் ஈடுபட்டதாக பூதப்பாண்டி மத்தியாஸ் நகரைச் சேர்ந்த ஷாஜன்(32) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

அந்த கோழிப்பண்ணையில் ஷாஜன் வேலை செய்தார் என்றும், வேலையை விட்டு நிறுத்தியதால் கோழிகளுக்கு விஷம் வைத்துள்ளார் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x