Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM
வேலூர்: வேலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், காத்திருப்புப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு, ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அமிர்தவள்ளி தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பரசுராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் பங்கேற்றுப் பேசினார். உழைக்கும் பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குப்பு, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
இதில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவை யில் 110 விதியின் கீழ் அறிவித்த அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் களை அரசு ஊழியராக்குவேன் என்று கூறியது, அகவிலைப் படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் அறிவிக்கவேண்டும், பணி ஓய்வின்போது பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டதுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT