Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் லட்சுமி வெங்கடேஷ் கோரிக்கை குறித்து விளக்கினார். மாவட்டச் செயலாளரும் மாநில துணைத் தலைவருமான எலிசா சிறப்புரை நிகழ்த்தினார். இதில், பங்கேற்றவர்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x