Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு மார்ச் 16-ம் தேதி கடைசி நாள்

மின்வாரியத்தில் உதவி கணக்குஅலுவலர் பணிக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில், உதவி கணக்கு அலுவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். காலிப் பணியிடங்கள் 18. விண்ணப்பதாரர்கள் பட்டயக் கணக்கு (சிஏ) அல்லது ஐசிடபிள்யூஏ-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது 18-ஆகஇருக்க வேண்டும். ஆதி திராவிடர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும்பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. பிற வகுப்பினருக்கு அதிகபட்ச வயது வரம்பு30-க்குள்ளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயதுக்குள்ளும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 48-க்குள்ளும் இருக்க வேண்டும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, வரும் மார்ச் 16-ம் தேதி கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x