Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
மின்வாரியத்தில் உதவி கணக்குஅலுவலர் பணிக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில், உதவி கணக்கு அலுவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். காலிப் பணியிடங்கள் 18. விண்ணப்பதாரர்கள் பட்டயக் கணக்கு (சிஏ) அல்லது ஐசிடபிள்யூஏ-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது 18-ஆகஇருக்க வேண்டும். ஆதி திராவிடர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும்பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை. பிற வகுப்பினருக்கு அதிகபட்ச வயது வரம்பு30-க்குள்ளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயதுக்குள்ளும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 48-க்குள்ளும் இருக்க வேண்டும்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, வரும் மார்ச் 16-ம் தேதி கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT