Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

தமாகா சார்பில் போட்டியிடவிருப்ப மனு

தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25, 26, 27 தேதிகளில் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களது விருப்ப மனுவை பிப்.25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

விருப்ப மனு கட்டணமாக பொதுத் தொகுதிகளுக்கு ரூ.5 ஆயிரம், மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ.2,500 செலுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x