Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
அரசு தேர்வுகள் துறை சார்பில் தமிழகம் முழுவதும் தேசிய திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை ஆண்டுதோறும் ரூ.12 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, கோவை மாவட்டத்தில் 51 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "கோவை மாவட்டத்தில் 5,387 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 4,930 பேர் தேர்வெழுதினர். 457 பேர் தேர்வெழுத வரவில்லை" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT