Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் அணைப்பாளையம் குளத்தை சேர்க்க கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் அணைப்பாளையம் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுப்பணித் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மனுவில், "அணைப்பாளையத்தில் சுமார் 56.60 ஏக்கர் பரப்பில் மேற்கண்ட குளம் அமைந்துள்ளது.

தற்போது பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ள இக்குளம், கி.பி.700-களில் கொங்கு நாட்டை ஆண்ட சோழ மன்னர்களால் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை மூலமாக, கடந்த 1300 ஆண்டுகளாக நீர் பெற்று வந்தது. 1990-ம் ஆண்டு முதல் சாயக்கழிவு பிரச்சினையால் குளம் பாதிக்கப்பட்டது. எனவே, 2006-ம் ஆண்டு குளத்தின் நீராதாரமான தடுப்பணை உடைக்கப்பட்டு, குளத்துக்கு நீர் விடுவது தற்போது வரை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் இக்குளத்தையும் சேர்த்து, நீர் வழங்கி குளத்தை சார்ந்துள்ள பெரும்பான்மையான மக்களின் தொழிலான விவசாயத்தை காக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x