Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

புதுச்சேரி அருகே மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட பெண் மாயம்

புதுச்சேரி

புதுச்சேரி சண்முகாபுரம் அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஹசீனா பேகம் (35). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ஹசீனா பேகம் அப்பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

சண்முகாபுரம் ஓடை பகுதியை ஒட்டி வசிப்பவர்கள் அனைவரும் தங்கள் இருசக்கர வாகனத்தை ஓடைக்கு அருகில் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். அதுபோல் ஹசீனா பேகம் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தை ஓடையை ஒட்டிய வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கியுள்ளார். நேற்று காலையில் எழுந்தபோது கனமழை காரணமாக ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஹசீனா பேகம் தனது பைக்கை எடுக்க முயன்றுள்ளார். அப்போது தண்ணீரின் வேகம் காரணமாக இருசக்கர வாகனம் இழுத்து செல்லப்பட்டது. அதனை பிடிக்க முற்பட்டபோது, தடுமாறி விழுந்த ஹசீனா பேகத்தை வெள்ளநீர் அடித்து சென்றது. அவரது கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடையில் குதித்து மீட்க முயன்றனர். ஆனால்அதற்குள் அவரை வெள்ளநீர் இழுத்து சென்றதில் மாயமானார்.

உடனே இதுகுறித்து மேட்டுப் பாளையம் காவல் நிலையம், கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து கோரிமேடுதீயணைப்பு வீரர்கள், மேட்டுப் பாளையம் போலீஸார் வெள்ளத் தில் அடித்துச் செல்லப்பட்ட ஹசீனாபேகத்தை தேடும் பணியில் ஈடுபட் டனர். நீண்ட நேர தேடலுக்கு பிறகு ஹசீனா பேகத்தின் இருசக்கர வாகனம் மட்டும் மீட்கப்பட்டது. ஆனால் அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணிநடைபெற்று வருகிறது. இச்சம்ப வம் அப்பகுதியில் சோத்தை ஏற்ப டுத்தியுள்ளது.

இதனிடையே மழை வெள்ளத் தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை மீட்காததை கண் டித்து சண்முகபுரம் பகுதியில் அவரது உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x