Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
புதுச்சேரியில் ஆளும் காங்கி ரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்களது பதவி களை ராஜினாமா செய்ததால் மகளிர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் தலைவிபிரேம் பஞ்சகாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
இத்தனை ஆண்டுகளாக அதிகார பதவியை அனுபவித்து விட்டு, தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள். அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் செய்து விட்டு, வாய்ப்பளித்த கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டு இப்படி அநாகரிகமான முறையில் நடந்து கொள்வது சரியானதல்ல. வேறு கட்சிக்கு சென்றால் கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து மேலும் 10 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்ற காரணத்தால் ராஜினாமா என்ற போலி காரணங்களை தெரிவிக்கின்றனர்.
இதை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், இவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
பல மாநிலங்களில் பாஜக குதிரைபேரம் நடத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், திமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று சந்தர்ப்பவாத கட்சிகளும் சேர்ந்து இதனை செயல்படுத்துகின்றன. வரும் தேர்தலில் இந்த மூன்று கட்சிகளையும் மக்கள் நிராகரிப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக அதிகார பதவியை அனுபவித்து விட்டு, தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT