Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
பெங்களூருவில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த வீரர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 6-வது மாநில அளவிலான நீச்சல் போட்டி பிப். 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், மதுரையைச் சேர்ந்த வீரர்கள் அப்துல்சலாம் 100 மீ. ப்ரி ஸ்டைலில் தங்கம், 50 மீ. ப்ரிஸ்டைலில் வெள்ளி, 50 மீ. பேக் ஸ்ட்ரோக்கில் வெள்ளி ஆகிய மூன்று பதக்கங்களைப் பெற்றார். அதேபோல், முகமது ஹாரூண் 100 மீ. ப்ரி ஸ்டைலில் தங்கம், 50 மீ. ப்ரி ஸ்டைலில் வெள்ளி என 2 பதக்கங்கள் பெற்றார்.
முதலாம், இரண்டாம் இடம் பெறுபவர் மார்ச் 20, 21, 22 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி பெறுவர். அந்த வகையில் மதுரை வீரர்கள் இருவரும் தேசிய நீச்சல் போட்டியில் பங்கேற்கின்றனர். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளை மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் என்.லெனின், மாவட்ட நீச்சல் சங்கச் செயலாளர் என்.கண்ணன், ரேஸ்கோர்ஸ் விடுதி மேளாலர் ராஜா ஆகியோர் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT