Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
சிவகாசி அருகே விஜய கரிசல் குளம் பகுதியில் வெம்பக் கோட்டை போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது வீட்டின் அருகே பட்டாசு தயாரித்த ராமர் (47) என்பவரைக் கைதுசெய்து 20 கிலோ பட்டாசுகளை பறி முதல் செய்தனர்.
விருதுநகர் சூலக்கரை அருகே உள்ள ரயில்பாலம் பகுதியில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது அவ் வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை நடத்தி அதில் இருந்த 3 ஆயிரம் குரோஸ் பட்டாசு திரிகளை பறிமுதல் செய் தனர். மேலும் ஜீப்பில் இருந்த மாரிச்செல்வத்தைக் (27) கைது செய்தனர்.
இதேபோல, சாத்தூர் பிரதான சாலையில் அனுப்பங்குளம் வேலுச்சாமி (20) என்பவரிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்து கிழக்கு போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT