Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து விருதுநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

விருதுநகரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கேஸ் சிலிண்டரை இரு சக்கர வாகனத்தில் கட்டிக்கொண்டு மேளத்துடன் ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் பாத்திமா நகர் மாதா கோயில் திடல் அருகே ஊர்வலம் தொடங்கி, 60 அடி சாலை, முதல் தெரு, மூஞ்சி மாதா கோயில் தெரு வழியாக தண்ணீர் தொட்டி அருகே நிறைவு பெற்றது. பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நகர் தலைவர் தீபக் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் மாரிக்கனி, சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர் செயலாளர் பி. கருப்பசாமி தொடக்க உரையாற்றினார். போராட்டத்தை ஆதரித்து முன்னாள் மாவட்டச் செயலாளர் எல்.முருகன் பேசினார். மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத் கண்டன உரையாற்றினார். மேலும், நிர்வாகிகள் கார்த்திக்பாபு, குமார், பொன்.பாண்டி, மாரிக்கனி, ஜூலியஸ், ஜீவா ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x