Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோபால்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஒன்றியச் செயலாளர் வெள்ளைகண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி, மாவட்டக் குழு உறுப்பினர் பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகரில் பாத்திமா நகர் மாதா கோயில் திடல் முதல் தண்ணீர் தொட்டி வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கேஸ் சிலிண்டரை இரு சக்கர வாகனத்தில் கட்டிக்கொண்டு மேளத்துடன் ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT