Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
மதுரை காதக்கிணறு ஆர்.சி உயர்நிலைப்பள்ளியில் 2005-06-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் இயக்கம் சார்பில் ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்குப் பள்ளித் தாளாளர் ஜோசப் அந்தோணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வி.பால்ராஜ் முன்னிலை வகித்தார்.
முன்னாள் மாணவர் ஜான் சந்தோஷ் வரவேற்றார்.
இதில், ஆசிரியர்களைக் கவுரவப்படுத்தும் வகையில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதையொட்டி ரூ. 50 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்களைப் பள்ளிக்கு பரிசாக வழங்கினர்.
முன்னாள் தலைமை ஆசிரியர் ம.ஆரோக்கிய செல்வராஜ், முன்னாள் மாணவி மு.மாரீஸ்வரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னாள் மாணவர் சிக்கந்தர் கவிதை நூலை வெளியிட்டு நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT