Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதலுடன் தொடக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா நேற்று பூச்சொரிதலுடன் தொடங்கியது.

பூச்சொரிதலையொட்டி புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பல்வேறு இடங்களில் அன்னதானம் செய்யப்பட்டது.

பல்வேறு இடங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் பூக்களை கொண்டு சென்று அம்மனை வழிபட்டனர். நகரில் பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 28-ம் தேதி காப்புக்கட்டு நடைபெற உள்ளது.இதைத்தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினந்தோறும் அம்மன் வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x