Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் முப்பெரும் விழா

அரியலூர்: அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு இன்று(பிப்.22) அரியலூர் பேருந்து நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலை திறப்பு விழா, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கரோனா காலக் கட்டத்தில் 1,15,000 ரேஷன்கார்டுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது. விழாவில் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.வைத்திலிங்கம் கலந்து கொள்ள உள்ளார் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x