Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
பெரம்பலூர்: தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவராக த.கலியமூர்த்தி, செயலாளராக பா.சிலம்பரசன், பொருளாளராக கி.ராதாகிருஷ்ணன், செய்தித் தொடர்பாளராக க.காமராஜ், அமைப்புச் செயலாளராக வ.வேல்முருகன், தலைமையிடச் செயலாளராக ப.ராமர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் வயது வரம்பை தளர்வு செய்ய வேண்டும். சனிக்கிழமை வேலை நாளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT