Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் அனந்தகுமார்(30), ஜெஜெ நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் மகன் ரத்தினவேல்(27). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பாலக்குறிச்சியில் இருந்து பொன்னமராவதி நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தனர். ஆலவயல் பகுதியில் சென்றபோது சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. அதில், அனந்தகுமார், ரத்தினவேல் ஆகிய இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x