Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

வேலைவாய்ப்பு முகாம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வி.செந் தில்பாலாஜி பவுண்டேஷன்ஸ் சார்பில் கரூர் திருகாம்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. 2,000-க்கும் மேற்பட்டோர் முகா மில் கலந்து கொண்டனர். இதில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங் கப்பட்டன. இதில், அறக்கட்டளை நிர்வாகியும், திமுக மாவட்டப் பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி எம்எல்ஏ பேசியது: மத்திய அரசு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக கூறியது. தற்போது ஆண்டுக்கு 2 கோடி பேர் வேலையை இழந்து வருகின்றனர். மாநில அரசோ காலியாக உள்ள லட்சக் கணக்கான பணியிடங்களை நிரப் பாமல் உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x