Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM
தாய்மொழி தின விழாவை முன்னிட்டு, நாளை இயக்கம் சார்பில், மிதிவண்டி பயணம் நாகை அவுரித்திடலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நாளை இயக்கத்தைச் சேர்ந்த செகுரா தலைமை வகித்தார்.
நாகை அவுரித்திடலில் தொடங்கிய மிதிவண்டி பயணம், தேவி திரையரங்கம், புத்தூர், கிழக்கு கடற்கரைச் சாலை, வாஞ்சூர் சோதனைச் சாவடி, நாகூர், ஏழைப் பிள்ளையார் கோயில் வழியாக சென்று, மீண்டும் அவுரித்திடலில் முடிவடைந்தது. மிதிவண்டி பயணத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர் கள் உள்ளிட்டோருக்கு, திருவள்ளுவர், பாரதியார், பாரதி தாசன், வள்ளலார் ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிடப்பட்ட துணிப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் பாலசண்மும் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT