Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM
விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் வட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விளாத்திகுளத்தில் நடந்தது.
ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கலந்துகொண்டு, 3,019 பேருக்கு ரூ.11.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது, “ தொடர் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1.21 லட்சம் ஹெக்டேர் பயிர் சேதத்துக்கு ரூ.76 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. புதூர், விளாத்திகுளம் பகுதிகளுக்கு மட்டும் 35,700 ஹெக்டேருக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு தொகை முதல்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.16 கோடி வழங்கி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் மேலும் ரூ.46 கோடி வரவு வைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில் ரூ.181 கோடி பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!