Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் கோவில்பட்டி புதிய மாவட்டம் உருவாக்கப்படும்: அமைச்சர்

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவுக்கு பாராட்டு விழா நடந்தது. நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமை வகித்தார். பசும்பொன் அறக் கட்டளை நிறுவனர் எம்.பரமசிவம் முன்னிலை வகித்தார். பொதுநல மருத்துவமனை தலைவர் டி.கே.டி.திலகரத்தினம் வரவேற்றார்.

விழாவில், அமைச்சர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சராக பணியாற்றி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொகுதிக்கு செய்துள்ளேன். கோவில்பட்டி நகருக்கு 2-வது குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளேன். 248 கிராம குடிநீர் திட்டம் ஓரிரு நாளில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மீண்டும் அதிமுக அரசு அமைந்ததும் பம்பை ஆறு - வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இளையரசனேந்தல் குறுவட்டத்தை இணைத்து கோவில்பட்டியை தலைமையிட மாகக் கொண்டு கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க திட்டம் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x