Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM
அரக்கோணம்: அரக்கோணம் அருகே ரூ.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரசுப் பள்ளி கட்டிடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் சு.ரவி திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள எம்.ஆர்.எப். நிறுவனத்தின் சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் மிட்டப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடம் மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு ரூ.22 லட்சத்தில் நவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நேற்று முன்தினம் நடைபெற்றது.
அரசுப் பள்ளி கட்டிட திறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், எம்.ஆர்.எப். மூத்த பொது மேலாளர் கே.வி.எஸ்.ரவிபிரகாஷ், பொது மேலாளர் ஜான் டேனியல் ஆகியோர் முன்னிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் சு.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து, அரக்கோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் நவீன மருத்துவ உபகரணங்களை சட்டப்பேரவை உறுப்பினர் சு.ரவி வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT