Published : 22 Feb 2021 03:18 AM
Last Updated : 22 Feb 2021 03:18 AM

கூட்டுறவு சங்க கட்டிடம் திறப்பு விழா

திருப்பத்தூர்: நாட்றாம்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க நவீன அலுவலக கட்டிடத்தை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க நவீன அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 26,217 விவசாயிகளுக்கு ரூ.200 கோடி மதிப்பில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.2.45 கோடி மதிப்பிலான விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், 109 பயனாளிகளுக்கு ரூ.64.22 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார். அப்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் திருகுண ஐயப்பதுரை, துணை பதிவாளர் முனிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x